சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

புதுவையில் லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினி!

புதுச்சேரியில் நடைபெற்று வரும்  லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்து கொண்டார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும்  லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்து கொண்டார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்டப் படிப்பிடிப்பு ஏற்கெனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்துள்ளது. இன்று புதுச்சேரி ரோடியர் மில் பழைய வளாகத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Story image

இதற்காக நேற்று மாலை தனது மகளுடன் புதுச்சேரி வந்தடைந்தார் ரஜினிகாந்த். இன்று ரோடியர் மில்லில் நடைபெறும் படப்பிடிப்புக்கு ரஜினி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரஜினியின் சண்டைக் காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.

Story image

இதற்கிடையே, ரஜினியை காண ரசிகர்கள் திரண்டதால், மில்லின் நுழைவுவாயில் பூட்டப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.