காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: கௌதம் மேனனுக்கு சிகரெட் பிடிக்க கற்றுத்தந்த லோகேஷ் கனகராஜ்!

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை!

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ஜூன் 23இல் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர், டிரைலர் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சுனைனா கூறியதாவது:
பெரிய நடிகர்களுக்காக வெறுமனே கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பமில்லை. இதுமாதிரி வந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்துள்ளேன். வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்கள் அதனளவில் வெற்றி பெற்ற படங்களே. ஆனால் காதலில் விழுந்தேன் அளவுக்கு மற்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. எனது முன்னாள் மேனஜரும் ஏன் கமர்ஷியல் படங்களில் நடிப்பதில்லை என திட்டுவார். எனக்கு அது குறித்து கவலையில்லை. நான் ஒரு ஆர்டிஸ்ட். மக்களை மகிழ்விக்க பல விதமான கதாபத்திரங்களை ஏற்று நடிக்க ஆசை. கதைக்கும், எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். ரெஜினா படம் உங்களுக்கு பிடிக்குமென நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பசுக்களை பாதுகாக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

இ-20 எரிபொருளுக்கு எதிா்ப்பு: தில்லி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆகஸ்ட் 4-இல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி

ஓணான்கரடு பகுதியை தொல்லியல் மரபுத் தலமாக அறிவிக்கக் கோரிக்கை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



