வாடிவாசல் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.
இதையும் படிக்க: தங்கலான் படப்பிடிப்பை நிறைவு செய்தார் பார்வதி
சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், வாடிவாசல் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.