சில நடிகைகள் தோற்றத்திலேயே தங்கள் ஆளுமையைக் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் மிக உறுதியான பெண் என்கிற அடையாளத்துடன் கேமராவில் தோன்றக்கூடிய நடிகை ஷ்ரேயா ரெட்டி.
விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் ஷ்ரேயா. அதன் பிறகு வெயில், காஞ்சிவரம் உள்ளிட்ட சில படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்தவர் திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகினார்.
மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் நடிப்பில் தமிழில் ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. தற்போது, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: ஓடிடியில் கண்ணூர் ஸ்குவாட்!
இந்நிலையில், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே ஷ்ரேயா தேர்ந்தெடுத்து வருகிறாராம். சிறிய வேடமாக இருந்தாலும் தன் நடிப்பு தனியாகத் தெரிய வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பவருக்கு சலார் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.