நாயகி ஆவதே தற்போதைய குறிக்கோள்: ஜிகர்தண்டா நாயகி சஞ்சனா நடராஜன்!

நாயகி ஆவதே தற்போதைய குறிக்கோள்: ஜிகர்தண்டா நாயகி சஞ்சனா நடராஜன்!

ஜிகர்தண்டா படத்தில் கவனம் ஈர்த்த நடிகை சஞ்சனா நடராஜனின் நேர்காணல்... 
Published on

நோட்டா, கேம் ஓவர், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில்  ஒரே பாடலில் மிகவும் புகழ்பெற்றார். தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நாயகியாக கவனம் பெற்றுள்ளார். 

இன்ஸ்டாகிராமில் நடிகை சஞ்சனா நடராஜன் பதிவிடும் புகைப்படங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் நீளம் காரணமாக இவருடைய பகுதிகள் எடிட்டிங்கில் நீக்கப்படத்து குறித்த கேள்விக்கு, “35 நாள்கள் நடித்தேன். படத்தில் ஒரே நாளில் எங்களுக்கு (எஸ்.ஜே.சூர்யா) காதல் மலரவில்லை. அதற்கான காட்சிகள் பல இருந்தன.

வாரிசு படத்தில் லெஜண்டரி நடிகை குஷ்புவுக்கே அந்த மாதிரி நடக்கும்போது இதெல்லாம் சினிமாவில் சாதாரணம். ஸ்கிர்ப்டில் இருப்பது அப்படியே திரைக்கு வரவேண்டும் என எதிர் பார்க்க முடியாது” எனக் கூறினார். 

மேலும் பேசிய சஞ்சனா, “படத்தின் அளவை விட வாய்ப்பு கிட்க்கும்போதெல்லாம் நடிக்கிறேன். கதை கேட்கும்போத் எனக்கும் கதைக்கும் முக்கியத்த்வ்ம்இருக்கிறதே என மட்டுமே கவனிப்பேன். அதன் அளவு குறித்து கவலை படமாட்டேன். தற்போதைய நோக்கம் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதே” எனக் கூறினார்.

நடிகை சஞ்சனா நடராஜன் தற்போது 2 தமிழ்ப்படம் (போர், பட்டில் ராதா), ஒரு மலையாளப் படத்திலும் (டிகி டிகி) நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com