நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரச்சிதா மகாலட்சுமி!

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 3:17 pm IST

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.  இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன்பின், விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் மற்றும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், வெள்ளித் திரையிலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா, அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகமான ரசிகர்களைப் பெற்றார்.

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரச்சிதா மகாலட்சுமி, தனக்கு அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதில், தனக்கு ஹார்மோன் பிரச்னை உள்ளது என்றும், உணவை நுகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும் என்று தெரிவித்துள்ளார். மருத்துவரை அணுகிய போது, இது அரிய வகையான  ஹார்மோன் பிரச்னை என்றும், ஆரோக்கியமான உணவு முறையின் மூலம் இந்த நோயை குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ரச்சிதாவின் நோய் பாதிப்பு குறித்து அவரது ரசிகர்கள் இப்படி எல்லாம் கூட நோய் உள்ளதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.