மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஜெயராம்!

மார்கோனி மத்தாய் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஜெயராம் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 11:59 am IST

இயக்குநர் மிஷ்கின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்த மிஷ்கின் மீண்டும் படங்களை இயக்குகிறார். 

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் படம் இயக்க உள்ளார் மிஷ்கின். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்கோனி மத்தாய் என்ற மலையாளப் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், ஜெயராமும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.