Enable Javscript for better performance
குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது

    By DIN  |   Published On : 25th October 2023 08:41 AM  |   Last Updated : 25th October 2023 11:23 AM  |  அ+அ அ-  |  

    vinayakan2

    நடிகர் விநாயகன் கைது

    எர்ணாகுளம்: குடிபோதையில் ரகளை போலீசாரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுக்காக பிரபல நடிகர் விநாயகத்தை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவரின் சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகம் அவரது மனைவியுடன் சண்டையிட்டதாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்கு குடியிருப்பு பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் விநாயகத்தின் வீட்டுக்கு வந்த காவலர்கள் விசாரணை நடத்திய பிறகு இருவரையும் வியாழக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் கொடுத்துச் சென்றனர்.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையம் வந்த விநாயகன், அங்கிருந்த காவல் அதிகாரியை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், காவல் நிலையத்தில் அமர்ந்து புகைப்பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதையும் படிக்க | சர்வதேச அங்கீகாரம் பெற்ற காதல் என்பது பொதுவுடமை படம்!

    இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அதில், மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவலர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக வழக்குப் பதிந்து விநாயகத்தை கைது செய்தனர்.

     

    இதையடுத்து இரவு 10.30 மணியளவில் விநாயகத்தை ஜாமீனில் விடுவித்ததாக எர்ணாகுளம் வடக்கு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp