கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பனி விழும் மலர் வனம்.. பாடல் அல்ல, புது சீரியல்!

யாரடி நீ மோகினி, ரெக்க கட்டி பறக்குது மனசு, தேன்மொழி பி.ஏ., ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்தார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 4:58 pm IST

ஈரமான ரோஜாவே தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரன் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடருக்கு பனி விழும் மலர் வனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த விணுஷா தேவி இத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.

Story image

யாரடி நீ மோகினி, ரெக்க கட்டி பறக்குது மனசு, தேன்மொழி பி.ஏ., ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் சித்தார்த் குமரன்.

2021ம் ஆண்டு அகடு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதிலும் தனது நடிப்புக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.

ஈரமான ரோஜாவே இரண்டாவது சீசனில் நடித்ததன் மூலம் ஏராளமான பெண் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது பனி விழும் மலர் வனம் என்ற புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் சித்தார்த்தின் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.