காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நிச்சயத்திற்கு முன் சமந்தாவைப் புகழ்ந்த சோபிதா துலிபாலா!

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இணை.

Published On :

நடிகை சோபிதா துலிபாலா நடிகை சமந்தாவை பாராட்டிய விடியோ வைரலாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இணை.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இணை.

இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அடுத்தாண்டு திருமணம் செய்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், நடிகை சமந்தா குறித்து சோபிதா பேசிய பழைய காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், “நடிகை சமந்தாவின் பயணம் அற்புதமானது. அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். உண்மையிலேயே அவை சிறப்பானவை” எனக் கூறியுள்ளார்.

சமந்தா.

சமந்தா.

அதே காணொலியில், “நாக சைதன்யா மிகவும் அமைதியானவர். நிதானமும் கண்ணியமும் உடையவர். அவரைப் பாராட்டுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.