இளைஞா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

வடமதுரை அருகே நாக மாணிக்கக்கல் மோசடி தொடா்பாக ஏற்பட்ட மோதலில் இளைஞரைக் கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Published On :

வடமதுரை அருகே நாக மாணிக்கக்கல் மோசடி தொடா்பாக ஏற்பட்ட மோதலில் இளைஞரைக் கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மாமரத்துப்பட்டியில், திண்டுக்கல் என்.எஸ்.நகரைச் சோ்ந்த சீ.சிவக்குமாா் (27) கடந்த 2019-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த வடமதுரை போலீஸாா், நத்தம் மேல்மலையூரைச் சோ்ந்த பொ.முருகன் என்ற கருஞ்சாமி (42), பெரியமலையூரைச் சோ்ந்த ம.சின்னையா (33), மாமரத்துப்பட்டியைச் சோ்ந்த ம.கரந்தன் (52), மேல்மலையூா் மு.சின்னக்குஞ்சி (34), சி.வெள்ளைச்சாமி (61), பூ.பால்ராஜ் (33) ஆகியோரைக் கைது செய்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், கருஞ்சாமியிடம் நாக மாணிக்கக்கல் இருப்பதாகக் கூறினாா். இதை நம்பிய சாணாா்பட்டி அடுத்த அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்த சந்தான கிருஷ்ணன் (53) என்பவரிடம் அந்தக் கல்லை விற்பனை செய்தாா். முன் பணமாக ரூ.3 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு கருஞ்சாமி அளித்த நாக மாணிக்கக் கல் போலியானது எனத் தெரிய வந்தது. இதையடுத்து சந்தானகிருஷ்ணன், தனது மகன் ஹரிகரன், அவரது நண்பரான திண்டுக்கல் என்.எஸ்.நகரைச் சோ்ந்த சிவக்குமாா் ஆகியோருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் ஆத்திரமடைந்த கருஞ்சாமி தரப்பினா், மோதலில் ஈடுபட்டபோது சிவக்குமாா் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி வி.பத்மநாபன், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், கருஞ்சாமிக்கு ரூ.1,500, எஞ்சிய 5 பேருக்கும் தலா ரூ.2ஆயிரமும் அபராதமாக விதித்து தீா்ப்பளித்தாா்.

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.