12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வைரலாகும் கோட் படத்தின் புதிய போஸ்டர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளன.

Published On :

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு மாதமே உள்ளதால், திட்டமிட்டபடி திரைப்படம் திரைக்கு வருமென்றே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களில் கோட் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஏமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. காரணம், இதுவரை கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்றுமே பெரிதாக ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் திரைப்படம் ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

சாதாரண திரைகளைவிட ஐமேக்ஸ், இபிஐக்யூ தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் திரைப்படம் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.