
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய இணையத் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா. சந்தையில் மூட்டை தூக்கும் 4 சிறுவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும் கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தொடர்ந்து, கோலி சோடா - 2 தயாரானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார்.
இதில் நடிகர்கள் சேரன், ஷ்யாம், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.
ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் விரைவில் இத்தொடர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.