முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சூர்யாவுடன் நடனமாடிய ஸ்ரேயா!

சூர்யா - 44 படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

News image

சூர்யா, ஸ்ரேயா.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 1:05 pm IST

நடிகர் சூர்யாவின் படத்தில் நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் அந்தக் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அந்தமானுக்குப் பின் ஊட்டியில் நடைபெற்று வந்த சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இடுக்கியில் துவங்கியது.

இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா மற்றும் ஸ்ரேயா இணைந்து நடனமாடும் பாடல் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயா சரண்.

ஸ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. நடிகர்கள் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன்பின், மார்க்கெட் இழந்தவர் தற்போது மீண்டும் திரைப்படங்களுக்கு முயற்சித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.