நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

நான் யார்? மேனன், மெனன்? ரூமி கவிதையால் மீண்டும் பெயர் குறித்து பதிவிட்ட நடிகை!

நடிகை நித்யா தனது பெயர் குறித்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

News image

நித்யா மெனன். - படம்: இன்ஸ்டா / நித்யா மெனன்

Updated On :10 டிசம்பர் 2024, 9:39 pm IST

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

தற்போது தனுஷுடன் இட்லி கடை படத்திலும் அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் 'டியர் எக்ஸஸ்' படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனக்கு பின்னொட்டாக இருக்கும் பெயர் சாதியப் பெயர் கிடையாது. மேனன் அல்ல மெனன் என விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நித்யா மெனன் கூறியதாவது:

நான் யார்? எனது பெயர் மட்டுமே. மற்றவை அனைத்தும் அவரே என்று ரூமி கூறியுள்ளார்.

ஆனால், எனது பெயர் என்ன? அதுவும் விவாதத்துக்குரியதாக உள்ளது. மெனன் என நான் சொல்கிறேன். அனைவரும் மேனன் என்று சொல்கிறார்கள். அடையாளம், வீடு, பெயர் என அனைத்தும் மற்றவர்கள் அறிந்துகொள்ளதானே.

நான் மீண்டும் ‘நான் யார் ?” என்ற இடத்துக்கே வருகிறேன். மன அமைதி. மற்ற அனைத்தும் தொடர்பற்றதாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.