நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எங்கள் கனவு நாயகன் ஆசிர்வதித்தபோது... விஜய் புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள்...

News image

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய்..

Updated On :19 டிசம்பர் 2024, 9:48 am IST

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, கோவாவில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக நடிகர் விஜய் கலந்து கொண்டது இன்று வரை பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் புகைப்படங்களை பகிர்ந்து, ”எங்களின் திருமணத்தில் எங்கள் கனவு நாயகன் கலந்து கொண்டு ஆசிர்வதித்தபோது.. அன்புடன் உங்கள் நண்பா, நண்பி” என்று கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.

Story image

இதனிடையே, கிறிஸ்துவ முறைப்படியும் சுரேஷ் - ஆண்டனி தம்பதி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.