ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எங்கள் கனவு நாயகன் ஆசிர்வதித்தபோது... விஜய் புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள்...

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய்..

Published On :19 டிசம்பர் 2024, 9:48 am IST

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, கோவாவில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக நடிகர் விஜய் கலந்து கொண்டது இன்று வரை பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் புகைப்படங்களை பகிர்ந்து, ”எங்களின் திருமணத்தில் எங்கள் கனவு நாயகன் கலந்து கொண்டு ஆசிர்வதித்தபோது.. அன்புடன் உங்கள் நண்பா, நண்பி” என்று கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.

Story image

இதனிடையே, கிறிஸ்துவ முறைப்படியும் சுரேஷ் - ஆண்டனி தம்பதி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.