/

இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் -2 தொடர்!

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு இரண்டாம் பாகத்தில் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகிறது.

News image

எதிரீச்சல் 2 தொடரின் நாயகிகள்...

Updated On :2 பிப்ரவரி 2026, 2:54 pm IST

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு இரண்டாம் பாகத்தின் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகிறது.

எதிர்நீச்சல் முதல் பாகம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிவுக்கு வந்தது. திருச்செல்வம் இயக்கும் தொடர் நீண்ட காலம் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது.

இதனிடையே எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தின் மீதான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியது.

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு பாத்திரங்களுடன் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்பு இருந்த பாத்திரங்களை வைத்தே கதை எழுதியுள்ளதாக இயக்குநர் திருச்செல்வம் அறிவித்திருந்தார்.

எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கவுள்ளார். இவர் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்.

நடிகை மதுமிதா, அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், எதிர்நீச்சல் 2ஆம் பாகத்தில் நடிக்கவில்லை.

இவரைத் தவிர, எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

எதிர்நீச்சல் -2 தொடரின் முன்னோட்ட விடியோக்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்றுமுதல் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.