மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் நாயகனாக ப்ரித்விராஜ் நடித்துள்ளார். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது. மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நஜீப் கதாபாத்திரத்தில் நடித்த பிருத்விராஜ், 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து 3 விதமாக தோற்றத்தை மாற்றியுள்ளார்.
இதையும் படிக்க: அரசியல் கட்சி துவங்கும் விஷால்?
இந்நிலையில், இப்படம் நாவலிலிருந்து எப்படி சினிமாவாக உருவானது என்கிற அனுபவத்தை வெளியிட்டுள்ளனர்.