நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்தப் படத்திற்குப் பின் சூர்யா இயக்குநர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.
ஹிந்தியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜான்வியின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர், சூர்யாவுடன் ஜான்வி நடிக்க உள்ளதை நேர்காணல் ஒன்றில் கூறி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.