கேப்டன் மில்லரை ஈழத்தமிழர்கள் கதையாக உருவாக்க நினைத்தேன்: இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

கேப்டன் மில்லர் படத்தினை ஈழத்தமிழர்கள் கதையாக எடுக்க நினைத்தேன் என அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். 
கேப்டன் மில்லரை ஈழத்தமிழர்கள் கதையாக உருவாக்க நினைத்தேன்: இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “முதலில் கேப்டன் மில்லர் படத்தினை ஈழத்தமிழர்கள் கதையாக எடுக்க நினைத்தேன். ஆனால் அப்படி எடுத்தால் படத்தினை வெளியிட முடியாது. பல சிக்கல்கள் இருக்குமென்பதால் கதைக்களத்தினை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக இருக்குமாறு மாற்றினேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com