தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சேரனின் ஜர்னி முதல் ஜோ வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

சேரனின் ஜர்னி முதல் ரியோ ராஜின் ஜோ வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

Published On :

சேரனின் ஜர்னி முதல் ரியோ ராஜின் ஜோ வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

அறிமுக இயக்கநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'ஜோ'. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜன. 15 ஆம் தேதி வெளியாகிறது.

சேரன் இயக்கியுள்ள சேரன்ஸ் ஜர்னி என்ற வெப்  தொடர் ஜனவரி 12 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்கள். 

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது.

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி உள்ளிட்டோர் நடித்த சிவப்பி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபுள் திரைப்படம் அமேசான் ப்ரைமில் ஜன. 11-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.