25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய சாய் பல்லவி!

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:46 pm IST

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா  முழுவதும் கவனம் பெற்றார்.

தற்போது, சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

முன்னதாக, பூஜா கண்ணன் அவரது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதில், வினீத் என்பவருடன் தனக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி, வினீத் - பூஜா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு, தனது குடும்பத்துடன் நடனமாடி உள்ளார்.

சாய்பல்லவி நடனமாடிய விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.