
மனசுக்கேத்த மன்னாரு படத்தில் 1986ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. அவர் பல்வேறு முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடல் பாடியும் இருக்கிறார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு நம்பரில் இசையமைப்பாளர் தேவா எக்ஸில் இணைந்தார். தற்போது தொடர்சியான தனது அப்டேட்டுகளை தனது எக்ஸ் பக்கத்தில் கூறி வருகிறார்.
தற்போது முதன்முறையாக கோயம்புத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.13ஆம் தேதி ஒடிசா மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயண்ட் ஃபிலிம்ஸ், ஏஎல்விஐ டிஜிடெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கு “கொஞ்சநாள் பொறு தலைவா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.