குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

30 ஆண்டுகளுக்கு முன்பும் தற்போதும்..! மோகன்லாலுடன் எடுத்த புகைப்படம் வைரல்!

மலையாள நடிகர் மோகன்லால் உடன் முப்பதாண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

News image

நடிகர்கள் பினு பப்பு, மோகன்லால் - படம்: இன்ஸ்டா / பினு பப்பு

Updated On :4 ஜூலை 2024, 6:11 pm IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  ‘நெரு’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மோகன்லாலின் 360வது படத்தை 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை ஷோபானா நடிக்கிறார். 1985இல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து அவிடத்தி போலே இவிடேயும் என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004இல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 56ஆவது முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் பினு பாப்பு நடிக்கிறார். இவர் ஏற்கனவே 1994இல் மோகன்லாலுடன் எடுத்த புகைப்படத்தினையும் தற்போது எடுத்த புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், “முப்பதாண்டுகள் கடந்துவிட்டன! இருப்பினும் அதே நவீனம் மாறாமல் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.