டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

எந்திரனுக்காக பாட ஒப்புக்கொண்ட மைக்கேல் ஜாக்சன்! ஆனால்.. என்ன ஆனது?

எந்திரன் படத்தில் பாடலைப் பாட மைக்கேல் ஜாக்சன் ஒப்புக்கொண்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஜூலை 2024, 7:15 pm IST

எந்திரன் படத்தில் பாடலைப் பாட மைக்கேல் ஜாக்சன் ஒப்புக்கொண்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும், பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்களிடம் உரையாடல் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ 2009 அம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போது ஏஜெண்ட் ஒருவரின் மூலம் மைக்கேல் ஜாக்சனைச் சந்திக்க முடியுமா? எனக் கேட்டேன். அவர் இதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பவதாக் கூறினார். ஒருவாரம் வரை எந்தப் பதிலும் வரவில்லை. நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பின், ஆஸ்கர் பரிந்துரையில் என் பெயர் வந்ததும் மின்னஞ்சல் வந்தது. அதில், மைக்கேல் ஜாக்சன் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், நான் சந்திக்க விருப்பமில்லை என்றேன். ஒருவேளை, நான் ஆஸ்கர் விருதை வென்றால் சந்திக்கிறேன் என்றும் கூறினேன். தொடர்ந்து, நான் ஆஸ்கர் வென்றதும் அதற்கு அடுத்தநாள் மைக்கேல் ஜாக்சனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்ததுடன் 2 மணிநேரம் வரை சந்திப்பு நீண்டது. பின், இந்தியா வந்தேன்.

அப்போது, எந்திரன் படத்தின் இசைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்குநர் ஷங்கரிடம் நான் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்ததைக் கூறினேன். அவர், நீங்களும் மைக்கேல் ஜாக்சனும் சேர்ந்து பாடலாமே என்றார். நானும் ஆர்வமானேன். உடனே, மைக்கேல் ஜாக்சனுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவரும், நீங்கள் என்ன சொன்னாலும் இருவரும் இணைந்து செய்யலாம் என்றார். இருமுறை நாங்கள் பாடல் குறித்து விவாதித்தோம். ஆனால், அதற்குள் மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார்.” எனத் தெரிவித்தார்.

ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் இருந்திருந்தால் எந்திரன் படத்திற்கு சர்வதேச அளவில் கவனம் கிடைத்திருப்பதுடன் தமிழ் சினிமாவிலும் முக்கிய நிகழ்வாக இருந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.