தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

புதிய தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா!

’தி ப்ளிஃப்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா..

News image

பிரியங்கா சோப்ரா!

Updated On :24 ஜூலை 2024, 9:24 am IST

நடிகை பிரியங்கா சோப்ரா, புதிய ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து, பாலிவுட், ஹாலிவுட் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் குடியேறினார்.

திருமணத்துக்கு பிறகு ஹாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தற்போது ‘தி ப்ளிஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

19ஆம் நூற்றாண்டில் மெர்சல் என்ற பெண் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போராடும் கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில், கடல் கொள்ளைக்காரியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

இதற்காக, மோஹக் ஹேர்ஸ்டைலுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.