மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு டேக் ஆஃப் எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

லீனா மணிமேகலை இயக்கத்தில் சைபர் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் படத்திற்கு ‘தன்யா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கிராமிய விருது பெற்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்ஷி இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். 2022இல் அறிவிக்கப்பட்டு இன்னும் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை ஊர்வசியுடன் இணைந்து பார்வதி புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு உள்ளொழுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை ஆர்எஸ்விபி தயாரிக்க கிரிஸ்டோ டாமி இயக்க சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரம்... திருநங்கை அனுஸ்ரீ வேலன் நெகிழ்ச்சி!

உடற்பயிற்சி சர்ச்சைக்கு விளக்கமளித்த பேட்மேன் பட நாயகன்!

சண்டைக் காட்சிகளில் அசத்திய ஆலியா பட்..! பாபி தியோல் புகழாரம்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




