நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரபல மலையாள நடிகரின் மூத்த மகன் மரணம்!

பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் மூத்த மகன் (37) காலமானார்.

News image

நடிகர் சித்திக் உடன் அவரது மூத்த மகன்.

Updated On :27 ஜூன் 2024, 5:56 pm IST

மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்திக். 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகளை பல முறை வென்றுள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் சித்திக் சிறப்பான படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழில் ரங்கூன், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது மூத்த மகன் 37 வயதான ராஹீன் சித்திக் காலமாகியுள்ளார். இவரது தம்பி ஷாஹீன் (35) மம்மூட்டியின் பதேமரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துணைக் கதாபாத்திரங்களில் முக்கியமான சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுவாசப் பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த ராஹீன் சித்திக் நுரையீரல் செயலிழப்பினால் காலமாகியுள்ளார்.

மலையாள சினிமா பிரபலங்கள்,சித்திக்கின் ரசிகர்கள் இந்தத் துயரத்தின்போது அவருடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.