12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கேக்கில் எல்சியூ, டிசி உடன் துப்பாக்கி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளுக்கு இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published On :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளுக்கு இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு  லோகேசஷ நன்றி தெரிவித்தார். அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு எல்சியூ குறும்படம் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ வசனகர்த்தாவும் இயக்குநருமான ரத்னகுமார் தனது எக்ஸ் பதிவில் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கேக்கில் எல்சியூ, டிசி என எழுதப்பட்டுள்ளது. உடன் துப்பாக்கி வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளது. டிசி திரைப்படங்கள் லோகேஷுக்கு மிகவும் பிடித்தமானது. எல்சியூ அவர் உருவாக்கியுள்ள சினிமாட்டிக் யுனிவர்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.