ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இது மார்பிங்.! சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

சமூக வலைதளங்களில் வைரலான சமந்தாவின் புகைப்படம் மார்பிங் என அவரின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :6 மே 2024, 10:14 am

DIN

நடிகை சமந்தா சமீபத்தில் தன் 37-வது பிறந்தநாளை ஏதென்ஸ் நகரில் நண்பர்களுடன் கொண்டாடினார். தொடர்ந்து, தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் ‘பங்காரம்’ என்கிற படத்தில் நடிக்க உள்ளதையும் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று (மே.5) தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை சமந்தா வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. அதில், நோயிலிருந்து குணமாவதற்கான சிகிச்சை குறித்த புகைப்படமும் குளியல் தொட்டியில் நிர்வாணமாக உடல்பாகங்களை மறைத்தபடியான படத்தையும் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உடனடியாக இரண்டாவது புகைப்படத்தை அவர் நீக்கிவிட்டதையும் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.

முதல் படம்.

முதல் படம்.

நீக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், இதை சமந்தா வெளியிட்டிருந்தால் உடனடியாக வைரலாகியிருக்கும் என்றும் சில மணிநேரங்கள் கழித்தே அப்படம் பொது கவனத்திற்கு வந்ததால், இது மார்பிங் செய்யப்பட்டதுதான் என சமந்தாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்டோரின் சித்திரிக்கப்பட்ட போலி கவர்ச்சி விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏஐ டீஃப் ஃபேக் (AI deep fake) தொழில்நுட்பத்தின் மூலம் யாரோ ஒருவரின் கவர்ச்சி விடியோக்களில் நடிகைகளின் முகத்தை தத்ரூபமாக எடிட் செய்து வெளியிட்டது அச்சத்தை ஏற்படுத்தியது.

தற்போது, சமந்தாவின் புகைப்படத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், அந்த நிர்வாணப் படத்திலும் இடம்பெற்று படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அளவிற்கு மார்பிங் செய்யப்பட்டிருப்பதுதான் சமந்தா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அதேநேரம், இதுகுறித்து சமந்தா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால், இன்று இன்ஸ்டாகிராமில், “உண்மையான பலம் என்பது உங்களை நியாயப்படுத்தவோ அல்லது நிரூபிக்கவோ தேவையில்லை” என்கிற வாசகத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால், இது மார்பிங் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.