நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சின்னத்திரை நிகழ்ச்சியில் சிம்ரன்!

சின்னத்திரை நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :26 மே 2024, 2:57 pm IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்க போது யாரு, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இசை மற்றும் பாடல்கள் தொடர்புடைய கேள்விகள் இரு குழுக்களிடன் ஒவ்வொரு சுற்றுகளிலும் கேட்கப்படும். இதற்கு சரியான பதில் அளிக்குன் குழுவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

இந்நிலையில், ஸ்டார்ட் மியூசிக் 5-வது சீசனின் முதல் எபிசோடில் நடிகை சிம்ரன் பங்கேற்பாளராக கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பிரியமானவளே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் நாயகியாக நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் மகான், நம்பி விளைவு ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். சென்னையில், உணவகத் தொழிலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.