

போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
நடிகர் சரத்குமாரின் மகளான இவருக்கு சினிமாவில் நாயகியாக பெரிய இடம் கிடைக்கவில்லையென்றாலும் கம்பீரமான வில்லி கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன. இறுதியாக , இவர் நடித்த மைக்கல், யசோதா, ஹனுமன் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, நடிகை வரலட்சுமிக்கும் ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் மார்ச் 1 ஆம் தேதி திருமண நிச்சயம் நிகழ்ந்தது. இந்த நிச்சயம் இருவீட்டார் சம்மத்துடன் நடைபெற்றது.
இந்த நிலையில், வரலட்சுமியின் திருமணம் ஜூலை 2 ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான,ஏற்பாடுகளை நிகோலய் குடும்பத்தினர் செய்து வருகின்றனராம்.
திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றாலும் அதற்கு முன் நிகழும் மெஹந்தி நிகழ்ச்சி சென்னை தாஜ் ஹோட்டலிலும் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலிலும் நடைபெற உள்ளதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.