இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நாயகனாக அறிமுகமாகும் ஆமிர் கான் மகன்!

ஹிந்தி நடிகர் ஆமிர் கானின் மகன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 மே 2024, 6:37 pm IST

ஆமிர் கானின்  நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

ஆமிர்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ஏகேபி (ஆமிர் கான் புரடக்‌ஷன்ஸ்) தயாரிப்பில் ‘லாகூர், 1947’ என்ற தலைப்பில் புதிய படத்தினை தயாரிக்கிறார் ஆமிர் கான். இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவில்லை.

ஜுனைத் கான்

ஜுனைத் கான்

ஆமிர் கானுக்கு ஜுனைத் கான் எனும் மகனும் இரா கான் எனும் மகளும் இருக்கிறார்கள். தற்போது ஜுனைத் கான் முதன்முதலாக திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். மஹாராஜ் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் ஜெய்தீப் ஆலாவட், ஷாலினி பாண்டே உடன் நடித்திருக்கிறார்கள். உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Story image

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தினை தயாரிக்க சித்தார்த் பி மல்ஹோத்ரா இயக்கியுள்ளார். 1862இல் நடைபெற்ற கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிகாரமுள்ள ஒரு நபருக்கும் பயமறியா பத்திரிகையாளருக்கும் நடக்கும் கதை என படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.