சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிக் பாஸ் 8: பவித்ராவுடன் தரக்குறைவாக சண்டையிடும் சத்யா!

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடிக்க வேண்டும்.

News image

பவித்ராவுடன் சத்யா - படம் | எக்ஸ்

Updated On :13 நவம்பர் 2024, 4:42 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பள்ளிக்கூட டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடிக்க வேண்டும்.

பிக் பாஸ் வீட்டின் அன்றாட வேலைகளைத் தவிர்த்து பெரும்பாலான நேரங்களில் மாணவர்களாகவே போட்டியாளர்கள் நடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

கடந்த இரு நாள்களாக பள்ளிக்கூட மாணவர்களைப் போன்று வேடமிட்டு போட்டியாளர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் பவித்ராவுடன் சத்யா சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ராணவை சக போட்டியாளர்கள் பலரும் நிராகரிப்பதைப் போன்று நடந்துகொள்கின்றனர். அதீத ஆர்வம் காரணமாக ராணவ் உடன் பேசுவது நமக்கே பாதமகமாக மாறிவிடும் என பிக் பாஸ் போட்டியாளர்களில் பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராணவ்வுக்கு ஆதரவாக பவித்ரா குரல் கொடுக்கிறார். பள்ளிக்கூட டாஸ்க்கின்போது ராணவை அடிப்பதைப் போன்று சத்யா கோபப்படுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த பவித்ரா, ராணவிடம் நடந்துகொள்ளும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என சத்யாவைக் கண்டிக்கிறார்.

இதற்கு பதிலளித்த சத்யா, உனக்காகத்தான் ராணவிடம் அப்படி நடந்துகொண்டதாகக் கூறி, ஆத்திரத்தில் கத்துகிறார். உன்னைத் தொந்தரவு செய்வதால்தால் நான் அவனிடம் அப்படி நடந்துகொண்டேன் எனக் கூறுகிறார்.

எனக்காக யாரும் பேச வேண்டாம், எனக்கும் ராணவுக்கும் பிரச்னை என்றால் அதனை நானே சரிசெய்துகொள்வேன் என பவித்ரா கூறுகிறார்.

ஆத்திரத்தில் மரியாதையில்லாமல் சத்யா பேசுவதால், கோபமடைந்த பவித்ரா இனி மரியாதையில்லாமல் கூப்பிடுவதை நிறுத்துமாறு கண்டிக்கிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.