சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி தன் மீதான பாலியல் குற்றவழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் ஜெயசூர்யா.
இன்று (அக்.15) திருவனந்தபுரத்தில் உள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

நடிகர் ஜெயசூர்யா சிறப்பு விசாரணைக்குக் விழுவிடம் பதிலளித்து திரும்பியபோது... - S.Gopakumar
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நடிகை மினு முனீர், சோனியா மல்ஹார் ஆகியோர் நடிகர் ஜெயசூர்யா, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்கள். இது, ஜெயசூர்யா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
சோனியா மல்ஹார், “ தொடப்புழாவில் நடைபெற்ற பிக்மன் படப்பிடிப்பில் நான் கழிவறையில் இருந்து வெளியே வரும்போது, யாரோ என்னை பின்புறமாக இருந்து தொட்டார்கள். பார்த்தால் அது நடிகர் ஜெயசூர்யா. நான் அவரைத் தள்ளிவிட்டேன். பிறகு, அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு நாம் நண்பர்களாக தொடராலம்” என்றார்.
இவருடன் சேர்ந்து மினு முனீர் என்ற நடிகையும் ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்தியிருந்தார். ”ஒருமுறை நான் கழிவறையில் இருந்து வரும்போது பின்புறமிருந்து கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டார்” என்றார்.
பொய் எப்போதும் உண்மையைவிட வேகமானது
தனது 46ஆவது பிறந்தநாளில் ஜெயசூர்யா சமூகவலைதள பக்கத்தில், “ நானும் என் குடும்பமும் கடந்த மாதத்திலிருந்து அமெரிக்காவில் இருக்கிறோம். இதற்கிடையே, என் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது எனக்கும், என் குடும்பத்துக்கும், என்னை அறிந்தவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதை, சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்தப் புகார் தொடர்பாக என் சட்ட ஆலோசகர்கள் வழக்கை தொடர்வார்கள்.
மனசாட்சி இல்லாதவர்களால் யார் மீது வேண்டுமானாலும் போலியான குற்றச்சாட்டை வைக்க முடியும். இங்கு என் பணிகள் முடிந்ததும் விரைவில் நாடு திரும்புவேன். பொய் எப்போதும் உண்மையைவிட வேகமானது. ஆனால், உண்மை வெல்லும். நான் நம் நீதியமைப்பை நம்புகிறேன். இந்த பிறந்தநாளை இவ்வளவு வலிமிக்கதாக மாற்றியவர்களுக்கு நன்றி. பாவம் செய்யாதவர்கள் கற்களை எறியட்டும், ஆனால் பாவம் செய்தவர்கள் மீது மட்டுமே" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் என் அப்பா இயக்கத்தில் நடிப்பேனா? ரசிகரின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்!

சினிமா சோறு போடாது... ரசிகருக்கு அறிவுரை சொன்ன விஜய்!

அண்ணா, விரலை வெட்டி அனுப்பவா? ரசிகைக்கு விஜய் அளித்த பதில் என்ன?
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



