திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சுஷின் ஷ்யாம் திருமணம் செய்துள்ளார்...

Published On :

பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

மலையாளத்தில், ‘கிஸ்மத்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சுஷின் ஷ்யாம். தொடர்ந்து, கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், குருப், மாலிக், ரோமஞ்சம், மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட 20 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இறுதியாக, ஃபஹத் ஃபாசில் நடித்த போகன்வில்லா வெளியானது.

சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் பெரிய வரவேற்பைப் பெற்ற இசையமைப்பாளராக வலம் வருகிறார். பல பெரிய படங்களும் சுஷின் ஷ்யாமின் நேரத்திற்காகக் காத்திருக்கின்றன.

இவர் இசையமைப்பில் வெளியான பாடல்களும் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பெரிய கவனத்தைப் பெற்று வருகின்றன. ரோமஞ்சம் படத்தில் இடம்பெற்ற, ‘ஆத்மாவே போ’, மஞ்ஞுமல் பாய்ஸின் ‘குதந்தரம்’, ஆவேஷமின் ‘இலுமினாட்டி’ பாடல் உள்ளிட்டவை தமிழிலும் வெற்றி பெற்றவை.

மணமக்களுடன் ஃபஹத், நஸ்ரியா.

மணமக்களுடன் ஃபஹத், நஸ்ரியா.

இந்த நிலையில், இன்று சுஷின் ஷ்யாம் தன் நீண்ட நாள் காதலியான உத்தாரா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துள்ளார். குடும்பத்தினர் முன்னிலையில் கோவிலில் எளிமையாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.