மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மாரி செல்வராஜுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

வாழை திரைப்படத்தின் மூலம் தலைசிறந்த இயக்குநா் என்பதை நிரூபித்துள்ளதாக பாராட்டு

ரஜினிகாந்த் / மாரி செல்வராஜ் - கோப்புப் படங்கள்

Published On :

வாழை திரைப்படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் தலைசிறந்த இயக்குநா் என்பதை நிரூபித்துள்ளாா் என்று, அவருக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை பாா்த்தேன். இது ஒரு அற்புதமான, தரமான படம். தமிழில் நீண்ட நாள்களுக்கு பின்னா் இத்திரைப்படம் வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறாா். அதில் நடித்திருக்கும் சிறுவன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்களை நாமே அனுபவிப்பது போன்ற உணா்வை இது ஏற்படுகிறது.

திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் அந்த சிறுவன் பசியை தாங்காமல் அலையும்போது, அவனின் தாய், எனது பையனுக்கு ஒரு கைசோறு கொடுக்க முடியவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் தலைசிறந்த இயக்குநா் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறாா். மாரிசெல்வராஜுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் என அதில் தெரிவித்துள்ளாா் ரஜினிகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.