
கோட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தோற்றம் குறித்து வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப். 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
படத்தில் யாரெல்லாம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு நேரத்திலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு காட்சியில் பயன்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்த தகவல் வெளியானது.
இந்த நிலையில், கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்திலிருந்த விஜயகாந்த் தோற்றத்தை இப்படத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
கோட்டில் விஜய் புலனாய்வுத் துறை ஏஜெண்டாக நடித்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜய்காந்த் காவல்துறை உயரதிகாரியாக நடித்ததை இப்படத்துடன் தொடர்புபடுத்தும் காட்சிகள் இருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.