நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த்!

கோட் விஜயகாந்த் தோற்றம் குறித்து...

News image

நடிகர் விஜய் (கோட்), நடிகர் விஜயகாந்த் (கேப்டன் பிரபாகரன்)

Updated On :3 செப்டம்பர் 2024, 3:59 pm IST

கோட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தோற்றம் குறித்து வெங்கட் பிரபு பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப். 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

படத்தில் யாரெல்லாம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு நேரத்திலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு காட்சியில் பயன்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்த தகவல் வெளியானது.

இந்த நிலையில், கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்திலிருந்த விஜயகாந்த் தோற்றத்தை இப்படத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

கோட்டில் விஜய் புலனாய்வுத் துறை ஏஜெண்டாக நடித்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜய்காந்த் காவல்துறை உயரதிகாரியாக நடித்ததை இப்படத்துடன் தொடர்புபடுத்தும் காட்சிகள் இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.