நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் கடந்த 4 நாள்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது குறித்து படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம் இன்று(செப். 9) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த நிலையில், கோட் படம் திரைகளில் வெளியாகி நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அதிகளவில் வருகை தருவதால், வேலை நாளான திங்கள்கிழமையும் பல திரையரங்குகளில் கோட் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








