வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சூர்யா படப் பெயரில் புதிய தொடரில் நடிக்கும் லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகளான ஜோவிதா புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.

News image

ஜோவிதா லிவிங்ஸ்டன் - இன்ஸ்டாகிராம்

Updated On :30 செப்டம்பர் 2024, 10:09 am

நடிகர் லிவிங்ஸ்டன் மகளான ஜோவிதா புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மெளனம் பேசியதே என்ற படத்தில் தலைப்பே, புதிய தொடருக்கும் வைக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மெளனம் பேசியதே தொடர், பகல் நேரத்தில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தொடர், ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கம் எனக் கூறப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அருவி மற்றும் பூவே உனக்காக ஆகிய இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதா நடிக்கவுள்ளார்.

ஜோவிதா லிவிங்ஸ்டன்

ஜோவிதா லிவிங்ஸ்டன் - இன்ஸ்டாகிராம்

மெளனம் பேசியதே தொடர்!

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான அருவி தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

கன்னட மொழித் தொடரான 'கஸ்தூரி நிவாசா' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து அருவி தொடர் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

இரு தொடர்களும் முடிந்த நிலையில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த ஜோவிதா, அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடிவந்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது அந்தத் தொடருக்கு மெளனம் பேசியதே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மெளனம் பேசியதே தொடரின் படப்பிடிப்புத் தொடக்கம்..

மெளனம் பேசியதே தொடரின் படப்பிடிப்புத் தொடக்கம்..

முன்பு விஜய் படத்தின் தலைப்பான பூவே உனக்காக தொடரில் நடித்தது ஜோவிதாவுக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது சூர்யா நடித்த படத்தின் பெயரில் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத்தரும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.