ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாதி நடிப்பில் புதிய இணையத் தொடர் வெளியாகவுள்ளது. ஆராதனா எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய இணையத் தொடரின் முன்னோட்ட விடியோ தற்போது வெளியாகியுள்ளது.
குடும்ப சிக்கல்களிலிருந்து விலகி சுயமாக சவால்களை சந்திக்கும் பெண்ணாக நடித்துள்ள ஸ்வாதி, ஆராதனா பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2ஆம் பாகம் எடுக்கப்பட்டது.

ஈரமான ரோஜாவே-2 தொடரில் நடிகை ஸ்வாதி
இதில், நடிகை ஸ்வாதி முதன்மை பாத்திரத்தில் நடித்தார். நாயகன் தியவியம் ராஜகுமாரனுடனான காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஈரமான ரோஜாவே தொடரில் ஸ்வாதியின் நடிப்பிற்கு இரு முறை சின்னத்திரை விருதுகளும் கிடைத்தன.
ஈரமான ரோஜாவே -2 தொடர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சினிமா வாய்ப்புகளில் நடிகை ஸ்வாதி கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நடிக்க ஸ்வாதி ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை ஸ்வாதி
இதற்கிடையே ஆராதனா என்ற இணையத் தொடரில் நடிகை ஸ்வாதி நடித்துள்ளார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உறவுச் சிக்கல்களின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு கஷ்டப்படுவதை விட, சுதந்திரமான விருப்பமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்ணின் பாத்திரத்தில் ஆராதனாவாக ஸ்வாதி நடித்துள்ளார்.
ஆராதனா - இணையத் தொடரில் நடிகை ஸ்வாதி
இந்தத் தொடருக்கான முன்னோட்ட விடியோ தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் ஆராதனா விடியோ இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

விவசாயிகள் நூதன கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

உழவா்கரை சுற்றுப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நாளை நிறுத்தம்

சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது: உழவா்கரை நகராட்சி ஆணையா்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



