இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "இன்று முக்கியமான நாள், வீட்டில் கற்புரம் ஏற்றவில்லையென்றால் நம்மைத் தீவிரவாதிகள் எனச் சொல்லிவிடுவார்கள். இந்தியா மோசமான காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயம் நமக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் நம் மனங்களைப் பண்படுத்தவும் பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிக்க நம்மிடம் இருக்கும் கலை என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். மக்களைச் சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நம்புகிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் ராமர் பிரதிஷ்டைக்காக அயோத்தி சென்றது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, பா.இரஞ்சித், “அவர் (ரஜினி) 500 ஆண்டுகால பிரச்னை முடிந்ததாகக் கூறினார். இது சரி, தவறு என்பதைத் தாண்டி அவர் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது” என பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான ப்ளூஸ்டார் வருகிற ஜன.25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சதீஷின் முஸ்தபா முஸ்தபா டிரைலர்!

திருமணத்திற்குப் பின்! உதய்பூர் விமான நிலையத்தில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரும் சரணடைய உத்தரவு!

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

