கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!

அட்லியின் புதிய படம் குறித்து...

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 3:11 pm IST

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் கதை குறித்து லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்தினர் ஆச்சரிப்பட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர்.

ரூ. 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு விடியோவில், அமெரிக்காவின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களான லோலா விஎஃப்எக்ஸ் (LOLA vfx), ஸ்பெக்ட்ரல் மோஷன் (Spectrel motion) மற்றும் லேகசி எஃபெகட்ஸ் (Legacy effects) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அட்லியும் அல்லு அர்ஜுனும் இணைந்து சென்று படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.

Story image

அதில், படத்தின் கதை குறித்து ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் படத்தின் விஎஃப்எக்ஸ் கலைஞரான மைக் எலிசல்டே, “இதுவரை நான் இப்படியொரு கதையைக் கேட்டதில்லை. நான் உருவாக்க நினைத்தது இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைத்தான்’ எனத் தெரித்துள்ளார்.

அதேபோல், லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர், “நம்பவே முடியாத கதை’ என அட்லியைப் பாராட்டியுள்ளார்.

இதனால், படப்படிப்பு துவங்குவதற்கு முன்பே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் இப்படம் வசூல் சாதனைகளைச் செய்யலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜப்பானில் மாநாடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.