காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கர்ணனில் வாளால் உருவாக்கப்பட்ட பயணம்..! தனுஷின் 56-ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!

நடிகர் தனுஷின் 56-ஆவது திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

தனுஷின் 56-ஆவது படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்

Published On :10 ஏப்ரல் 2025, 10:18 am IST

நடிகர் தனுஷின் 56ஆவது திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

கர்ணன் திரைப்படம் வெளியாகி நான்காண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றிரவு (ஏப்.9) வெளியானது.

இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக டாக்டர். ஐசரி கே. கணேஷன் தயாரிக்கிறார்.

கர்ணன் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்.9இல் வெளியானது.

தற்போது, மாரி செல்வராஜ் தனது 5ஆவது படமான பைசன் என்ற படத்தை துருவ் விக்ரமை வைத்து இயக்கி வருகிறார். 6ஆவது படமாக தனுஷை இயக்குகிறார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது:

கர்ணனின் வாளால் உருவாக்கப்பட்ட பயணத்தின் 4வது ஆண்டைக் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி! இத்தனை ஆண்டுகளாக கர்ணனைக் கொண்டாடி ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

எனது அடுத்த படம் மீண்டும் என் அன்பான தனுஷுடன் என்பதைச் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!

இது நீண்ட காலமாக என் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது, மீண்டும் தனுஷுடன் கைகோர்ப்பதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்!

ஐசரி கே.கணேஷ் சாருடன் இது எனது முதல் படம். அவருடன் இணைந்ததுக்கு நான் மிகவும் மகிழ்கிறேன். இது உண்மையிலேயே ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.