நடிகர் சூர்யா தன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து பேசியுள்ளார்.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நேற்று (ஏப். 18) சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “நான் இங்க வந்தபோது பலரும் என்னிடம் நல்லா இருக்கீங்களா? எனக் கேட்டனர். உங்களின் அன்பு இருந்தால்போதும் எப்போதும் நான் நன்றாக இருப்பேன். வாழ்க்கையை நம்புகள். வாய்ப்புகளைத் தவறவீடாதீர்கள். ரெட்ரோ படத்தில் நானும் பூஜா ஹெக்டோவும் தம்மம் பற்றி பேசுவோம். நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? என் வாழ்க்கையின் நோக்கம் அகரம் ஃபவுண்டேஷன்.
ஒரு நடிகராக இருப்பதைவிட அகரம் நிறுவனத்தைப் பலரிடமும் கொண்டு சேர்த்ததைத்தான் பெரிதாக நினைக்கிறேன். இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம். இதை சாத்தியப்படுத்திய அகரம் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்

சூர்யா - 47 படத்தில் மோகன்லால்? இயக்குநர் பதில்!

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்
இதற்குக் காரணம் என் உதவியாளர்தான்... சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


