நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தன் சினிமா விருப்பத்தால் வீட்டினரிடமிருந்து வந்த எதிர்ப்பைப் பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் நல்ல முகவெட்டும் நடிப்பாற்றலும் கொண்ட நடிகையென்பதால் கதையம்சமுள்ள படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். அதேநேரம், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான எந்தத் திரைப்படமும் வணிக வெற்றியைப் பெறாமல் இருந்தது.
அண்மையில் வெளியான லெனின் திரைப்படம் வெற்றியைப் பெற்று அவர் மீதான அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்கிற பெயரையும் மாற்றியது. இந்த வெற்றியால், தன்னை ராசில்லாத நடிகையெனச் சொன்னவர்களுக்கு, ”சினிமா என்பது கூட்டுழைப்பு சார்ந்தது. அதில் வெற்றி கிடைத்தால் அனைவருக்குமானதுதான். ஆனால், தோல்வியடைந்தால் நடிகை ராசியில்லாதவர் என எப்படிச் சொல்ல முடிகிறது? என்னை ராசியில்லாத நடிகை எனக் கூறிய போது, அது காயத்தைத் தரவில்லை. மாறாக, குழப்பத்தைத்தான் கொடுத்தது. ஒரு திரைப்படத்தில் இயக்குநர், திரைக்கதை, நாயகன் எனப் பலர் சம்பந்தப்பட்டிருந்தாலும் தோல்விக்கு நடிகைகளைக் குற்றம்சாட்டுகின்றனர்.” என பாக்யஸ்ரீ பதிலடியும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், “நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் எனச் சொன்னதும் என் அம்மா கடுமையாக எதிர்த்தார். மேலும், வாட்ஸ் ஆப்பில் என் எண்ணை 6 மாதங்களுக்கு ப்ளாக் செய்து வைத்தார். இதனால், நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அப்பாவும், சகோதரியும் ஆதரவு தெரிவிக்கவில்லை. பின், திரைத்துறையில் போராடி எனக்கான இடத்தைப் பிடித்தேன். அனைவரும் என் பெற்றோரை வியந்து பாராட்டும் அளவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியமாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Actress Bhagyashree Borse has spoken about the opposition she faced from her family due to her desire to pursue a career in cinema.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!
நல்ல சினிமாக்களுக்கான கனவு உண்டு!

காதலைவிட, அட்வெஞ்சரில்தான் ஆர்வம்: இயக்குநர் ஜேசன் சஞ்சய்

இதயம் முரளி என் வாழ்க்கையில் நெருக்கமான திரைப்படம்: ப்ரீத்தி முகுந்தன்
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




