தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

குக் வித் கோமாளி - 6 ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்பாக...

News image
Updated On :30 ஏப்ரல் 2025, 1:22 pm IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் நீங்குவதாக ரசிகர்களால் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்த இருந்த நிலையில், இந்த சீசனில் புதிதாக சமையல் கலைஞர் கெளசிக்கும் பங்கேற்கவுள்ளார்.

தொடர்ந்து ஆறாவது சீசனாக ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சீசன்களில் கோமாளிகளாக(சமையல் தெரியாதவர்) பங்கேற்ற புகழ், ராமர், சரத், சுனிதா, குரேஷி இவர்களுடன் புதிய கோமாளிகளாக நடிகை செளந்தர்யா, பாடகர் பூவையார், யூடியூப் பிரபலம் சர்ஜின், நடன கலைஞர் டோலி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.