குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாம் திரைப்பட டிரைலர்!

நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவான “பாம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 6:54 pm IST

நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று (ஆக.29) வெளியிட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பாம்”.

டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே, ஷிவாத்மிகா ராஜசேகர், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இந்தப் படத்தின் டிரைலரை படக்குழு இன்று (ஆக.29) வெளியிட்டுள்ளது. காளகம்மாய்பட்டி எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட நசைச்சுவை திரைப்படமாக இது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சில வாரங்கள் முன்பு வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ‘இன்னும் எத்தனை காலம்’ எனும் பாடல் ஆகியவை ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The film crew released the trailer of the film BOMB, starring actor Arjun Das, today (August 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.