காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மகேஷ் பாபுவின் புதிய சொகுசு திரையரங்கம்..! டிக்கெட் விலை எவ்வளவு?

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சொகுசு திரையரங்கம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.

மகேஷ் பாபுவின் புதிய சொகுசு திரையரங்கம் - படங்கள்: எக்ஸ் / மகேஷ் பாபு

Published On :

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ஏஎம்பி சினிமாஸ் (ஏசியன் மகேஷ் பாபு) என்ற புதிய சொகுசு திரையரங்கம் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ஏஎம்பி சினிமாஸ் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஏசியன் சினிமாஸ் இந்தத் திரையரங்குகளை அமைத்திருக்கிறது.

பல தொழில்களில் ஆர்வம் உடைய மகேஷ் பாபு சினிமா திரையரங்கிலும் ஆர்வமாக இருக்கிறார். முதல்முறையாக ஏஎம்பி சினிமாஸ் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதியதாக ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

ஏழு 3டி திரைகளைக் கொண்டதாக இந்த ஏஎம்பி சினிமாஸ் அமைக்கப்பட்டுள்ளது. விவிஐபிக்களுக்கும் தனியாக திரைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளாட்டினம், கோல்டு, லாங்கர்ஸ் என்ற 3 விதமான வகைகளுக்கு டிக்கெட் விலை முறையே ரூ.350, ரூ.295, ரூ.295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏஎம்பி சினிமாஸில் விடாமுயற்சி படத்தின் டிக்கெட் விலை.

ஏஎம்பி சினிமாஸில் விடாமுயற்சி படத்தின் டிக்கெட் விலை.

நடிகர் மகேஷ் பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஏஎம்பி சினிமாஸின் அறிமுக விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “சொகுசு... சௌகரியம்... அதிகபட்ச அளவில் அனுபவம்.. அதுதான் ஏஎம்பி சினிமாஸ். குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு தற்போது அவரது 29ஆவது படமாக பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடன் இணைந்து புதிய படத்துக்காக தயாராகி வருகிறார்.

கடைசியாக மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.