வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சுழல் - 2 பாடல்கள் வெளியீடு!

சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் வெளியீடு.

News image

சுழல் - 2

Updated On :24 பிப்ரவரி 2025, 10:08 pm IST

சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.

சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக்க காவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக முதல் பாகம் எடுக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பாகத்தை இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இருவரும் இயக்கியுள்ளனர்.

இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 9 பாடல்களும், 9 இசைக் கோர்வைகளும் சேர்த்து 18 பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

சுழல் - 2 இணையத் தொடர் வருகிற பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.